நிபந்தனையின்றி பேசத்தயார் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான் - வார்த்தை ஜாலம் காட்டுவதாகவும் அமெரிக்கா மீது புகார்
Jun 3 2019 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா கூறியதை ஈரான் நிராகரித்துள்ளது.
அமெரிக்காவுடனான இருதரப்பு அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகியது முதல், இருநாடுகளிடையே மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும், அந்நாட்டை அச்சுறுத்தும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் தனது போர்க்கப்பல்களையும், நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு ஈரான் ஏற்கெனவே கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருக்கும் நிலையில், அந்நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா திடீரென அறிவித்துள்ளது. இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் திரு.மைக் பாம்பியோ, முன் நிபந்தனையின்றி ஈரானுடன் பேசத் தயாராக இருப்பதாக கூறினார். ஆனால், இதனை ஈரான் அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து வாய் ஜாலம் காட்டி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.