சவுதி அரேபியாவில் அரசுக்கு சொந்தமான 2 கச்சா எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தீவிரவாத தாக்குதல்
Sep 14 2019 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் பதப்படுத்தும் இரண்டு ஆலைகள் மீது இன்று அதிகாலை ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான கச்சா எண்ணைய் சுத்திகரிப்பு ஆலைகள் அரம்கோ புக்கியாக் மற்றும் குரைஸ் பகுதிகளில் உள்ளன. இப்பகுதிகளில் 2 ஆலைகள் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், அதுகுறித்து சவுதி போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.