பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் பயங்கர தீ விபத்து - 60-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு
Oct 31 2019 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானின் கராச்சி-ராவல்பிண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 65 பயணிகள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில், கராச்சி-ராவல்பிண்டி இடையே தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று காலை லியாகத்பூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக, தீ மற்றொரு பெட்டிக்கும் பரவியது.
இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. தீப்பிடித்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தி, உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 65 பேர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.