ரஷ்யாவில் மலை கிராமங்களில் நடந்து சென்று தபால் வழங்கும் மூதாட்டி - 83 வயதிலும் தளராது உழைப்பதால் குவியும் பாராட்டுகள்
Nov 2 2019 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் 83 வயதாகும் மூதாட்டி ஒருவர், தள்ளாத வயதிலும் மலைபாதை வழியே நடந்து சென்று தபால்களை வழங்கும் பணியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.
ரஷ்யாவின் காகசஸ் குடியரசில் உள்ள வடக்கு ஒசட்டியாவை சேர்ந்த மூதாட்டியின் பெயர் எகாடிரினா. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர், மலைப்பாதை வழியே நடந்து சென்று, மிஸூர், புரோன், சேய் ஆகிய பகுதி மக்களுக்கு தபால்களை விநியோகித்து வருகிறார். வாரம் 6 நாள்களுக்கு அப்பகுதியில் நடந்து சென்று இந்தப் பணியை அவர் செய்து வருகிறார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் தபால்காரர் ஒருவரின் சேவையால் ஈர்க்கப்பட்டு, இந்த பணிக்கு வந்ததாக மூதாட்டி எகாடிரினா தெரிவித்துள்ளார். உழைப்பின் மீதான மூதாட்டியின் ஆர்வத்தைக் கண்டு, மலைபாதை சாலையில் வாகனங்களில் செல்லும் சிலர், தங்களது வாகனத்தை நிறுத்தி, அதில் அவரை அழைத்து செல்கின்றனர்.