செக் குடியரசு நாட்டில் மரக்கட்டைகளை வெட்டி சாய்க்கும் நூதன போட்டி : பார்வையாளர்கள் மகிழ்ச்சி
Nov 4 2019 9:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற மரக்கட்டைகளை வெட்டி சாய்க்கும் நூதன போட்டி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பிரேக் நகரில், குழு மற்றும் தனிநபர் என்று 2 பிரிவுகளாக இப்போட்டி நடைபெற்றது. மரக்கட்டைகளை ரம்பத்தால் அறுப்பது, கோடாரியால் அதிவிரைவாக வெட்டி சாய்ப்பது என, பல வகைகளில் போட்டி நடத்தப்பட்டது.
இதில், தனிநபர் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பிரெய்டன் மெயர் சிறப்பாக செயல்பட்டு, அதிவேகமாக மரக்கட்டைகளை ரம்பத்தால் அறுத்ததுடன், கோடாரியால் வெட்டி சாய்த்தார். அவரது வேகத்துக்கு பிற வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய வீரர் பிரெய்டன் மெயர் 75 புள்ளிகளை பெற்று முதலாவதாக வந்தார். அவருக்கு உலக சாம்பியன் பட்டம் அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர் கேசிடி சீயர் 66 புள்ளிகளுடன் 2ம் இடத்தையும், நியூசிலாந்தின் சேன் ஜோர்டான் 63 புள்ளிகளுடன், 3ம் இடத்தையும் பிடித்தனர்.