பிரசில் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு - ரஷ்யா, சீனா அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டம்
Nov 13 2019 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு முறைப் பயணமாக, தென் அமெரிக்க நாடான பிரசிலுக்கு சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று நடைபெறும், பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு இடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே சந்தித்து, பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.