சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெளிநாட்டில் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி - அவசர அவசரமாக லண்டன் அழைத்து செல்லப்பட்டார்
Nov 19 2019 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் உடல்நிலை மோசமடைந்ததால், நீதிமன்ற உத்தரவுப்படி, மேல் சிகிச்சைக்காக அவர் இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதால், லண்டன் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை ஏற்று, ஷெரிஃப்பை லண்டனுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நிபந்தனையுடன் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, சிறப்பு மருத்துவ வசதிகள் கொண்ட விமானம் மூலம், நவாஸ் ஷெரீஃப் இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.