உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் வாகனம் இயக்கும்போது செல்போன் பயன்படுத்துவதை கண்காணிக்க கேமரா
Dec 1 2019 7:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செல்போன்களை பயன்படுத்திக்கொண்டே வாகனங்களை இயக்குபவர்களை கண்டுபிடிக்கும் வகையில் ஆஸ்திரேலிய நாட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் பலரும் இதனை பின்பற்றாததால் வாகன விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை கண்டறியும் கேமராக்களை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் சாலைகளில் பொருத்தியுள்ளது. செல்போன் பயன்படுத்துவதை கண்டறியும் சிறப்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த கேமராக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வாகனம் ஓட்டும்போது தொலைபேசியில் பேசுவது சட்டப்பூர்வமானது என்றபோதும் வீடியோ கால் பேசுவது, புகைப்படம் எடுப்பது போன்றவை சட்டத்துக்கு புறம்பானது என்பது குறிப்பிடத்தக்கது.