பிரிட்டன் அரசியலில் ஆளுமை செலுத்தும் இந்திய வம்சாவளியினர் - கன்சர்வேடிவ் மற்றும் லேபர் கட்சியில் 10க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெற்றி
Dec 14 2019 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டன் தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, 12-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். உள்துறை அமைச்சராக இருந்த பிரீத்தி பட்டேல், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ளார். கருவூல தலைமைச் செயலராக இருந்த, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கும், சர்வதேச மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக இருந்த அலோக் சர்மாவும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த சைலேஸ்வரா, சுயெல்லா பிரேவர்மன், பிரீத்தி கவுர் கில், உள்ளிட்டோரும் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில், ககன் மொஹிந்திரா, கிளேர் கொட்டின்ஹோ, லேபர் கட்சி சார்பில் நவேந்தரு மிஸ்ரா ஆகிய புதுமுகங்களும் இத்தேர்தலில் வெற்றிக் கனியை பறித்துள்ளனர்.