மோசடி வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சகாரா குழும தலைவர் சுப்ரதா ராயை கைது செய்ய போலீசார் மேற்கொண்ட முயற்சி தோல்வி
Feb 28 2014 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மோசடி வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சகாரா குழும தலைவர் சுப்ரதா ராயை கைது செய்ய போலீசார் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய விளம்பரதாரரான சகாரா குழுமம், முதலீட்டாளர்களிடம் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாயை திரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் சகாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், பலமுறை ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது. மேலும் சுப்ரதா ராய்க்கு கடும் கண்டனத்தையும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சுப்ரதா ராயை கைது செய்ய லக்னோவில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற போலீசார் அவரைக் கைது செய்ய முடியாமல் திரும்பினர். இதனிடையே சுப்ரதா ராய், தம் மீதான பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.