நடிகை நயன்தாரா உள்ளிட்ட அன்னப்பூரணி திரைப்பட படக்குழுவினர் மீது தொடர் புகார் : நயன்தாரா உள்ளிட்ட 8 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
Jan 13 2024 10:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகை நயன்தாரா உள்ளிட்ட அன்னப்பூரணி திரைப்பட படக்குழுவினர் மீது தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தில் இந்து மத உணர்வுகளை புண்டுத்துபடி காட்சிகள் உள்ளதாக மும்பை போலீசில் அளித்த புகாரில் வழக்கப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நெட்பிளிக்சில் இருந்து அப்படம் நீக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநிலத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த 8 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.