பாதுகாப்பு குறைபாடு இல்லாமல் புல்வாமா தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை - இந்திய உளவுப் பிரிவான "ரா"வின் முன்னாள் தலைவர் Vikram Sood கருத்து
Feb 18 2019 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே புல்வாமா தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக, இந்திய உளவுப் பிரிவான "ரா"வின் முன்னாள் தலைவர் Vikram Sood தெரிவித்துள்ளார்.
ஹைதரபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் பேசிய திரு.Vikram Sood, வெடிகுண்டுகளை வாங்கியது, அவற்றை ஒருங்கிணைத்தது, தாக்குதலுக்கு பயன்படுத்திய காரை பெற்றது என ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறினார். சிஆர்பிஎப் வீரர்களின் வாகனங்கள் எங்கு செல்கின்றன, எந்த இடத்தில் தாக்குதலை நடத்த வேண்டும் என்பதும் பயங்கரவாதிகளுக்கு நன்கு தெரிந்துள்ளதாக அவர் கூறினார். தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுப்பதற்கு இது ஒன்றும் குத்துச்சண்டை போட்டி அல்ல என்றும் திரு.Vikram Sood தெரிவித்தார்.