தேர்தல் நேர வருமான வரி சோதனை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் - வருவாய் செயலர் உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
Apr 10 2019 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேர்தல் நேரத்தில், பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய நேரடி வரிகள் ஆணைய தலைவர், வருவாய் செயலர் ஆகியோரை இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விசாரணை அமைப்புகளை மத்திய பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டின. இதனையடுத்து, சோதனை குறித்து தங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என நிதி அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய நேரடி வரிகள் ஆணைய தலைவர், வருவாய் செயலர் ஆகியோரை இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.