அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா : பாரம்பரிய விளையாட்டுகள் - பொதுமக்கள் ஆர்வம்
Jan 17 2019 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சரவணன் தலைமையில், வேளச்சேரி அம்பேத்கர் நகரில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48-வது வார்டு பாரதிபுரத்தில், கழகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தங்க காசு, பட்டுச்சேலை உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் திரு. ராமுதேவர், கழக மாவட்ட தலைவர் திரு. சவரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வடுகபாளையம் அண்ணன்மார் கோயிலில் உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதில் குழந்தைகள், பெண்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.