சென்னையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
Feb 19 2019 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
கழக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திரு.தம்பி இஸ்மாயில் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக்நகரிலுள்ள தலைமைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு.செந்தமிழன், கழக மகளிரணி செயலாளர் திருமதி.வளர்மதி ஜெபராஜ், கழக அமைப்புச் செயலாளர் திரு.சுகுமார் பாபு, கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு.குமார், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.வேளச்சேரி சரவணன் சிறுபான்மை பிரிவு மாநில இணைச்செயலாளர் திரு.ஜெரால்ட், தலைவர் லெனின், மாநில துணைச்செயலாளர் அப்பாஸ் உள்ளிட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.