தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய, ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
திருவாரூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட கூத்தாநல்லூரில் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம், மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ். காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய திரு. எஸ். காமராஜ், பா.ஜ.க.விடம் அடகு வைக்கப்பட்ட அதிமுகவையும், மாண்புமிகு அம்மா அமைத்து கொடுத்த நல்லாட்சியையும் மீட்டெடுக்கக் கூடிய ஒரே தலைவர் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மட்டுமே என உறுதிபடத் தெரிவித்தார்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில், வளசரவாக்கத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரவாயல் பகுதி 145-வது வட்டத்திற்குட்பட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு. இ.லக்கி முருகன், மதுரவாயல் பகுதி கழக செயலாளர் திரு .என்.டி.தியாகராஜன் மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.கராத்தே பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி ஓலைப்பாடி, சொரத்தூர ஆகிய கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுக் கட்சிகளைச்சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ்.ஆர். தருமலிங்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
கடலூர் மேற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.கே.எஸ்.கே பாலமுருகன் தலைமையில் எலரி கிராமத்தை சேர்ந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.A.இளவரசன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.
நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நெல்லை சந்திப்பில் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற தீவிர களப்பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. கல்லூர் வேலாயுதம், மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் திரு.பரமசிவ ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்டீஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் உட்பட மாற்று கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. கே.டி. பச்சைமால், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் திரு. லட்சுமணன், கிழக்கு மாவட்ட அவை தலைவர் திரு.இமாம் பாதுஷா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.