அ.தி.மு.க கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ. அறிவிப்பு : டிடிவி தினகரன் குறித்து தவறான கருத்து தெரிவித்ததற்கு வருத்தம்
Mar 20 2019 1:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.தி.மு.க கட்சியின் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்,
திரு.டிடிவி தினகரன் குறித்து தான் தவறான கருத்து தெரிவித்திருந்தால், அதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக
கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடியின் ஆதரவாளரான திரு.சின்னப்பன், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், இ.பி.எஸ். தரப்பின் செய்தித்தொடர்பாளருமான திரு.மார்க்கண்டேயனுக்கு சீட் வழங்கப்படாததால், கட்சியினரிடையே அதிருப்தி நிலவியது. இதனைத்தொடர்ந்து, தனது ஆதரவாளர்களிடையே பேசிய திரு.மார்க்கண்டேயன், அ.தி.மு.க பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குறித்து தான் அவதூறாக பேசியிருந்தால், அந்தக் கருத்தை திரும்பப் பெற்று வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.