அனைவருடனும் வேறுபாடின்றி நட்புணர்வுடன் பழகிய முனைவர் ம.நடராசன், பெரியாரின் அடியொற்றி திராவிட கொள்கைகளை பின்பற்றியவர் : தலைவர்கள் புகழாரம்
Mar 21 2019 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனைவருடனும் வேறுபாடின்றி நட்புணர்வுடன் பழகிய முனைவர் ம.நடராசன், அய்யா பெரியாரின் அடியொற்றி திராவிட கொள்கைகளை பின்பற்றியவர் என்றும், ஒருபோதும் அந்தக் கொள்கைகளை விட்டுக்கொடுத்தது கிடையாது என்றும் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
தஞ்சையில் நடைபெற்ற முனைவர் ம.நடராசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய திராவிடர் கழகத்தலைவர் திரு.கி.வீரமணி, முன்னாள் எம்.பி. திரு.எல்.கணேசன் உள்ளிட்டோர் ம.நடராசனுடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்தனர்.