தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ரூ.18 கோடி பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் : பெரும்பகுதி பணம் அதிமுகவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவை
Apr 18 2019 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை சுமார் 18 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி பணம் அதிமுகவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து, தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதுவரை மொத்தம் 17 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி பணம் அதிமுகவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையாகும். மேலும் தேர்தல் தொடர்பாக 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மலேசிய தலைநகர் கோலாம்பூரிலிருந்து திருச்சி வந்த மலிண்டோ விமானத்தில், மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கதுறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ரஷீத் உசேன் என்பவர் மறைத்து எடுத்து வந்த 6 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 201 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவரிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.