நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தங்களது சொந்த ஊர்களில் வாக்கை பதிவு செய்தனர்.
தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன், நாராயணதேவன்பட்டி அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில், தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானதாகவும், எனவே அப்பகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. வெற்றிவேல், புரசைவாக்கம் பகுதியில் உள்ள இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. ஏ.கே. செல்வம், பூலாவாரி பஞ்சாயத்து அலுவலக வாக்குச் சாவடியில், குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி, நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதனகோபாலபுரம் வாக்குசாவடி மையத்தில், கடலூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு.காசி தங்கவேல், தனது வாக்கை பதிவு செய்தார்.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு, V. பாண்டி, தனது சொந்த ஊரான தேர்போகி கிளாமலையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் முனைவர்.ஆ.இளவரசன், பெரம்பலூர் துறைமங்கலம் டி.எல்.சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. எஸ்.செந்தமிழன், மயிலாடுதுறை நகரில், 32-வது வார்டில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மயிலாடுதுறை தொகுதியில், மக்களின் ஆதரவுடன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் அமோக வெற்றி பெறும் என கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில், இயந்திரத்தை செயல்முறைக்கு கொண்டு வர முடியாமல் அதிகாரிகள் திணறியதால் அரை மணி நேர தாமதத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது. கழக வேட்பாளர் திரு. இ. லட்சுமணன் குடும்பத்துடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. AG ஞானசேகரன், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது அவருடைய ஆதார் அட்டையை கேட்டு 15 நிமிடங்கள் காத்திருக்க வைத்ததால் வாக்குசாவடியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. புவனேஸ்வரன், ஆழ்வார்குளம் இந்து நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், வரிசையில் நின்று வாக்களித்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.கோமுகி மணியன், தியாகதுருகம் அருகே உள்ள முடியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொதுமக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமோக வெற்றிபெறும் எனக் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தென்காசி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திருமதி பொன்னுத்தாய், முதலாவதாக வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் முனைவர் ஜோதிமணி, விளாத்திகுளம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திருமதி ஜெயந்தி பத்மநாபன், தொகுதிக்குட்பட்ட சங்கராபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் செல்வி செங்கொடி, திருவாரூர் அருகேயுள்ள அகரதிருநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும், மக்களின் ஆதரவோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமோக வெற்றிபெறும் என கூறினார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. ஆர் பாலசுப்ரமணியம், தொகுதிக்குட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கை பதிவு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. கோதண்டபாணி, வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஜெயகோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. தாம்பரம் நாராயணன் தனது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் நின்று வாக்கைப் பதிவு செய்தார்.
காஞ்சிபுரம் தனி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. முட்டுக்காடு முனுசாமி, கழுபடூர் நடுநிலை ஊராட்சி பள்ளியில் தனது குடும்பத்தாருடன் நீண்ட வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்தார்.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. பொன். முருகேசன், தஞ்சை சுந்தரம் நகரில் உள்ள திருமகள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. டேவிட் அண்ணாத்துரை, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மீனாட்சிநகர் பகுதியில் அமைந்துள்ள துர்கா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
திண்டுக்கல்லில் உள்ள காந்திஜி நினைவு நடுநிலைப்பள்ளியில், கழக வேட்பாளர் திரு.பி.ஜோதி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் ஒரு மாற்றத்தை உருவாக்கும் என தெரிவித்தார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு.பொன்ராஜா, பெரிய முல்லை வாயல் கிராமத்திலுள்ள வாக்கு சாவடியில் பதிவு செய்தார்.
திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் கழக வேட்பாளர் திருமதி சாருபாலா தொண்டைமான் தனது வாக்கை பதிவு செய்தார்.