கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்கூட சுவரில் பிரிட்டிஷ் அரசின் சின்னமான சிங்கம் பொரித்த உருவம் கண்டுபிடிப்பு
May 21 2019 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் சுமார் நூறு ஆண்டு பழமை வாய்ந்த மன்னர்கள் காலத்து பள்ளி கூடத்தை புதுப்பிக்கும் பணியின் போது, சுவரில் பிரிட்டிஷ் அரசின் சின்னமான சிங்கம் பொரித்த உருவம் கண்டுபிடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அரசு உதவிபெறும் எஸ்.எம்.எஸ்.எம் மேல் நிலை
பள்ளி உள்ளது. 1920ம் ஆண்டு திருவதாங்கூர் சமஸ்தான அரசர் நினைவாக கட்டப்பட்ட இப்பள்ளி, சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்பள்ளியை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளியின் முன்பு உள்ள கட்டடத்தின் மேல் சுவற்றில் வர்ணம் பூசி புதுபிக்கும் பணியின்போது பிரிட்டிஷ் அரசின் சின்னமான சிங்கம் பொறித்த உருவம் தெரிந்ததால் கல்வி நிர்வாகம் அதை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இது போன்ற சின்னங்களை பார்ப்பது மிக அரிது என்பதால் ஏராளமானோர் அதனை பார்த்து செல்கின்றனர்.