திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு

May 22 2019 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி, தனது உயிருக்‍கு பாதுகாப்பு கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

திருச்சியில் நிதி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அழகர்சாமி என்ற ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தகபிரிவு மாநில துணைச் செயலாளராக உள்ளார். தொழில் முன்விரோதம் காரணமாக கடந்த ஃபிப்ரவரி 12-ம் தேதியன்று மர்மநபர்களால் அழகர்சாமி கடத்தப்பட்டு 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டு பின்னர் போலீசாரின் தேடுதலினால் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சிலர் மீண்டும் அழகர்சாமியை கடத்த முயன்றனர். அப்போது, அவரது கட்சியினர் அவரை மீட்டதுடன், கடத்த முயன்ற 3 பேரையும் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் அவர்களை காவல் துறையினர் விடுவித்துவிட்டனர். இதனையடுத்து திரு. அழகர்சாமி, தனது உயிருக்கு பாதுகாப்பு கோரியும், காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட கடத்தல் நபர்களை கைது செய்திடக்கோரியும் மாநகர காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00