சென்னை ராமாபுரத்தில் சட்டவிரோதமாக தண்ணீர் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் : அனுமதியின்றி அதிக அளவு தண்ணீர் எடுக்கும் நிறுவனத்திற்கு மக்கள் எதிர்ப்பு
Jun 20 2019 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ராமாபுரத்தில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிக அளவு தண்ணீர் உறிஞ்சி சட்டவிரோதமாக விற்பனை செய்துவருதாகக் கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ராமாபுரம் மூகாம்பிகை நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, உரிய அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிக அளவு தண்ணீர் உறிஞ்சி வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள், தண்ணீர் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக அளவு தண்ணீர் எடுப்பதால், தங்கள் வீடுகளின் தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாகவும், ஆனால், அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.