தூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் : ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அவலம்
Jun 21 2019 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் முற்றியுள்ள நிலையில், ஒரு குடம் குடிநீரை 10 ரூபாய்க்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து தண்ணீர் பெறும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இங்குள்ள ஐயப்பா நகரில், 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வந்த தண்ணீர், தற்போது 15 நாட்களாகியும் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், ஒரு குடம் குடிநீரை 10 ரூபாய்க்கு வாங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்னை தொடர்பாக அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் வரை மனு அளித்தும், சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தியும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என பெண்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.