அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு
Jun 26 2019 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் பலர் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வேலூர் மத்திய மாவட்டக் கழகம் காட்பாடி ஒன்றியச் செயலாளர் சங்கர் கணேஷ் - ஜமுனா தம்பதியரின் திருமண நாளையொட்டி, அவர்கள் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வேலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மண்டலப் பொறுப்பாளருமான திரு. பார்த்திபன் அப்போது உடனிருந்தார்.
திரு. பார்த்திபன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளான எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. ஆர். ராஜா, அம்மா பேரவை செயலாளர் திரு. கே. கோபி, அம்மா பேரவை துணை செயலாளர் திரு. வி. ராஜசேகர், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்டச் செயலாளர் திரு. எல். ராஜசேகர், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் திரு. எஸ். ரவிச்சந்திரன், இளைஞரணிச் செயலாளர் திரு. மோகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் துணைத் தலைவர் எம். தண்டபானி, எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் திரு. எம். ரமேஷ், இளைஞர் பாசறையின் தலைவர் திரு. வசந்தகுமார் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.