ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு
Jun 21 2019 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் இயக்குநர் பா. ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துவிட்டது.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ரஞ்சித், ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தலித் நிலங்கள் பறிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ரஞ்சித்துக்கு எதிராக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பா. ரஞ்சித் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவைவிசாரித்த நீதிமன்றம் ரஞ்சித்தை கைது செய்ய இன்றுவரை தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க மறுத்த நீதிபதி திரு. ராஜமாணிக்கம், வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.