மதுரையில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சரக்குகள் கொள்ளை : சிசிடிவி காட்சிகள் மூலம் வடமாநில இளைஞர் கைது

Jun 27 2019 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை வேனில் திருடிச் சென்ற வடமாநில இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

மதுரை கொடிக்குளம் பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர் ஜடாமுனி கோவில் தெருவில் சொந்தமாக ஜவுளி கடை மற்றும் கிடங்கு வைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு கடை‌யை பூட்டிவிட்டு, கடையில் பணியாற்றும் சுரேஷ் என்பவரிடம் சாவியைக் கொடுத்து சென்றுள்ளார். இந்த நிலையில் சுரேஷூடன் ராஜஸ்தானில் இருந்து வேலை தேடி வந்த சுமேர்சிங் என்பவர் தங்கியிருந்த நிலையில், சுரேஷுக்கு தெரியாமல் ஜவுளி கிடங்கு சாவியை திருடி, அங்கிருந்த சுமார் 10 லட்சம் மதிப்பு சரக்குகளை வேனில் திருடிச் சென்று விட்டு மீண்டும் சாவியை அறையில் வைத்துள்ளார். இதனையறியாமல் திங்கட்கிழமை கடையை திறந்து பார்த்த சுரேஷ் பொருட்கள் மாயமானது குறித்து அதிர்ச்சியடைந்து, போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கிடங்கில் பொருத்தப்பட்டிருக்‍கும் சிசிடிவி காட்சிகளை வைத்து மேற்கொண்ட விசாரணையில், சுமேர்சிங் நூதன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00