சென்னையில் நகைக் கடைக்குள் வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகைக் கொள்ளை : 2 பெண்களை கைது செய்து போலீஸ் நடவடிக்கை
Jun 27 2019 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் பட்டப்பகலில் நகைக் கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள ஒரு நகைக்கடைக்குள் வாடிக்கையாளர்கள் போல் நுழைந்த 2 பெண்கள் சமயம் பார்த்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றனர். அவ்விரு பெண்களும் அங்கிருந்து தப்பிச் சென்றதால், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த நகைக்கடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியைக் கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பெண்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன. அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி, அலமேலு ஆகிய அவ்விரு பெண்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் நகைகளை விற்ற பணத்தில் அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பெண்களிடம் நடத்தப்பட் விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தில் சில நகைக்கடைகளிலும் அவர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.