திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் குழாய் உடைப்பு : வீணாகும் பல லட்சம் லிட்டர் குடிநீர்
Jun 27 2019 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டத்தில் ஒருபுறம் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், மறுபுறம் குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்து வீணாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு பகுதியில், கடந்த மூன்று மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அவினாசி சாலையில் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல மணி நேரமாக குடிநீர் வீணாக வெளியாகி வருகிறது.