பத்திரிகையாளர்கள் மீது அதிமுக எம்.எல்.ஏ. மகன் தாக்குதல் : உயரதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி டிடிவி தினகரன் வேண்டுகோள்
Jun 27 2019 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு அரசு விழாவில், போலீசார் முன்னிலையிலேயே பத்திரிகையாளர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ கே.வி. ராமலிங்கத்தின் மகன் மீது, உயரதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி திரு. டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள கண்டன அறிவிப்பில், ஈரோடு அரசு விழாவில், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே, அ.தி.மு.க எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்திவ் உள்ளிட்டோர் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, உடனடியாக பிணையில் விடுவித்திருப்பது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் செயல் அல்ல என்றும், இதுபோன்று வேறு யாராவது தாக்குதல் நடத்தியிருந்தால் சும்மா விட்டிருப்பார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களை இப்படி அனுமதித்தால், காவல்துறை மக்களின் நம்பிக்கையை மொத்தமாக இழந்துவிடும் என குறிப்பிட்டுள்ள திரு. டிடிவி தினகரன், உயரதிகாரிகள் தலையிட்டு பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.