சென்னையில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண் கொலை : ஐஸ் அவுஸ் பகுதியில் பரபரப்பு
Jul 18 2019 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில், வட்டி பணத்தை கொடுக்க முடியாததால், வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பகுதியைச் சேர்ந்த அல்போன்ஸ் மேரி என்பவர், அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 15ம் தேதி அல்போன்ஸ் மேரி கடைக்கு சென்று வெகுநேரமாகியும் வீடுதிரும்பததால் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே கிணற்றில் அவரது சடலம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், ராயபேட்டையை சேர்ந்த தேவி, வள்ளி ஆகியோருக்கு மேரி வட்டிக்கு பணம் கொடுத்த நிலையில், ஒருகட்டத்தில் வட்டி பணம் செலுத்தமுடியாததால், தேவி, மேரியை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு அவரது கணவர் மணியின் துணையுடன் மேரியை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
வட்டிக்கு பணம் கொடுத்தவரையே கொலை செய்து கிணற்றில் வீசி சென்ற சம்பவம் ஐஸ் அவுஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.