வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு - 50 பேர் வேட்புமனு தாக்கல்
Jul 18 2019 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மக்களவைத் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்புமனு தாக்கலில் இறுதியாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ திரு. வாலாஜா அசேன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. 7 நாட்களாக வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இறுதி நாளான இன்று பிற்பகல் 3-மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 50 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலில் இறுதியாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ திரு. வாலாஜா அசேன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இச்சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.