ஊசி செலுத்தப்பட்டதால் குளிர் காய்ச்சலுக்கு ஆளான நோயாளிகள் --- பிரச்னைக்குரிய மருந்தை பயன்படுத்த வேண்டாமென மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
Jul 19 2019 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட ஊசியால் 50-க்கும் மேற்பட்டோர் குளிர்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர், நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 50 நோயாளிகளுக்கு, நேற்று மாலை, ஊசி போடப்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே, ஊசி போடப்பட்ட அனைவருக்கும் குளிர்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக மீண்டும் மாற்று ஊசி போடப்பட்டு, காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தகவலை அறிந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும், பிரச்னைக்குரிய மருந்தை பயன்படுத்த வேண்டாமென மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.