கன்னியாகுமரி, மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
Jul 19 2019 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. புவியரசன், குமரிக்கடல், மாலத்தீவு, மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்தார்.