தமிழகம் மற்றும் கேரளாவில் அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதில் சிக்கல்
Dec 2 2022 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் கேரளாவில் அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 16-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தை வெளியிடும் நிறுவனம் 70 சதவீத அளவிற்கு தொகை கேட்பதாக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதனால், தமிழ்நாட்டில் அவதார் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவிலும் திரைப்படத்தை வெளியிட 60 சதவீதம் தொகை கேட்பதால் சிக்கல் நீடிக்கிறது. இதுகுறித்து, விரைவில் கூட்டம் நடத்தி விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.