திருமணத்திற்கு பிறகும் நடிகைகளுக்கு திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது : சென்னை திரும்பிய நடிகை ஹன்சிகா பேட்டி
Jan 30 2023 6:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு திரை உலகில் மிகச்சிறப்பான எதிர்காலம் அமையும் என நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார். திருமணம் முடிந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார். சென்னை வருவது சொந்த வீட்டிற்கு வருவது போல் இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது திரையுலகில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை என குறிப்பிட்ட ஹன்சிகா, திருமணம் ஆவதற்கு முன்பும், பின்பும் நடிப்பதில் தனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.