13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராகும் சசிகுமார் : குற்றப்பரம்பரை நாவலை தழுவி எடுக்கும் படத்தில் விஜயகாந்த் மகன் ஹீரோ
Mar 20 2023 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2010 முதல் கதாநாயகனாக நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டிய சசிக்குமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து புதிய படத்தை சசிகுமார் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டில் இருந்தே தகவல்கள் வெளியாகின. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை மதுரையில் உள்ள தனது சொந்த ஊரில் ஈடுபட்டு வருகிறார் சசிகுமார். இந்த முழு பணிகளும் மே மாதத்திற்குள் நிறைவடைந்து, ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பை துவங்கிறார் சசிகுமார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.