'பத்மாவதி' படத்தில் நடித்தது பிடிக்கவில்லை : நடிகர் ஷாஹித் கபூர் பேட்டி
Jun 6 2023 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பத்மாவதி படம் திரைக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றநிலையில், அந்தப்படத்தில் தான் நடித்தது பிடிக்கவில்லை என்று நடிகர் ஷாஹித் கபூர் கூறியிருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்டோரின் நடிப்பில் 2018 ம் ஆண்டு வெளிவந்த படம் பத்மாவதி. இந்தப்படத்தில் ஷாஹித் கபூர், மகாராஜா ரத்தன் ராவல் சிங் வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பத்மாவதி படத்தில் நடிக்கும்போது இறுக்கமாக உணர்ந்ததாகக் கூறினார். அந்தப் படத்தில் மற்றவர்கள் தன் கதாபாத்திரத்தைப் பார்த்து ரசித்திருந்தாலும் தனக்கு மட்டும் பிடிக்காமல் போனதாகவும் ஷாஹித் கபூர் கூறியுள்ளார்.