திருச்சியில் நடைபெறும் மண்டல அளவிலான சதுரங்க போட்டி : ஏராளமான கல்லூரி மாணவ-மாணவியர் பங்கேற்பு
Jul 26 2013 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் கல்லூரிகளுக்கிடையே, மண்டல அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
திருச்சி மாவட்ட செஸ் அகாடமியும், பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து அப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கிடையே மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்துகின்றன. திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில், தஞ்சை, நாகை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 32 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 7 சுற்றுகளாக இப்போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற 4 சுற்றுகளின் முடிவில், திருச்சி பிஷப்ஹூபர் கல்லூரியைச் சேர்ந்த குணால், ஜமால் கல்லூரியைச் சேர்ந்த அஜ்மல், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி மாணவர் விஜயகுமார் தலா 4 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளனர். எஞ்சிய 3 சுற்று போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. இப்போட்டியில் முதல் 6 இடங்கள் பிடிக்கும் வீரர் வீராங்கனைகள் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சதுரங்கப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.