மேற்கு தொடர்ச்சி மலையில் மீண்டும் பெய்துவரும் சாரல் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Aug 5 2013 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு தொடர்ச்சி மலையில் மீண்டும் சாரல் மழை பெய்து வருகிறது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், கடந்த சில நாட்களாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதாலும், இதமான பருவம் நிலவியதாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளான செங்கோட்டை, தென்காசி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மீண்டும் சாரல் மழை பெய்தது. இதனால், குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, அருவிகளில் குளிக்க நேற்றிரவு தடை விதிக்கப்பட்டது.